நடனம்

சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.
பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.
இலக்கிய உலகின் ஒப்பிலா மணிகளாகத் திகழும் கம்பரின் கவிமொழிகளை பரதநாட்டிய அங்கங்களின் மூலம் ‘மகூலம் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி, ‘கம்பனின் கவியாற்றல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொணர்ந்தது.
‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாட நடத்திவரும் வருடாந்திர இந்திய கலாசாரத் திருவிழா நிகழ்ச்சி, இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிறு (ஏப்ரல் 14) காலை 10 முதல் 11.30 மணி வரை மீனாட்சி எனும் பரதநாட்டிய நாடகம் அரங்கேறியது.